8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடா..? தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!

0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

புகாரின் விபரம்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தேர்வர்கள் 15 பேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்த தேர்வுக்கான தற்காலிக தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1019 பேரும், விழுப்புரத்தில் இருந்து 763 பேரும் தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழக அரசு பதில் மனு:

இதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இது குறித்த விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here