எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்ய, வங்கி நிர்வாகம் புதிய வழிமுறை ஒன்றை அறிவித்துள்ளது.
புதிய வழிமுறை:
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பணப்பரிமாற்றத்திற்காக அதிகம் பயன்படுத்தும் சேவைகளில் ஒன்று வங்கி. என்னதான், ஆன்லைன் பரிவர்த்தனை முறைகள் வந்தாலும், பெரும்பாலான மக்கள் வங்கி சேவையையே நம்பி இருக்கின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தங்கள் பயனர்களுக்காக புதிய வழிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பயனர்களின் பணப்பரிமாற்றத்திற்காக, அனுப்பப்படும் ஓடிபி செயல் முறையில் மாற்றத்தை கொண்டு வர வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பயனர்களின் பாதுகாப்பு கருதி, ஓடிபி நம்பரை வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மெயில் முகவரிக்கு அனுப்ப, முடிவெடுத்துள்ளது. இதனால் பயனர்களின், பணப்பரிவர்த்தனைக்கு இனி எந்த சிக்கலும் இருக்காது என வங்கி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.