VIP கள் இனி இந்த முறையில் தான் தரிசனம் செய்யணும்.., திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
VIP கள் இனி இந்த முறையில் தான் தரிசனம் செய்யணும்.., திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
VIP கள் இனி இந்த முறையில் தான் தரிசனம் செய்யணும்.., திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் VIP களின் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாகதிருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி

கார்த்திகை மாதத்தையொட்டி உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. அதன் படி இலவச தரிசனம், சிறப்பு நுழைவு தரிசனம், VIP பிரேக் தரிசனம் போன்ற முறையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் VIP பிரேக் தரிசனம் அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை பக்கதர்கள் தரிசனம் செய்து வந்தனர். இதனால் இரவு 1.00 மணிக்கு நடை திறந்ததலில் இருந்து காலை 08.00 வரை இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் காலை 08.00 மணிக்கு மேல் VIP பிரேக் தரிசனம் மூலம் VIP க்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கணியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு., டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகள்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

இதனால் இலவச தரிசன வரிசையில் மக்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்யலாம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து VIP பிரேக் டிக்கெட் ரூ.1000 அல்லது ரூ.500 யை திருப்பதி மாதவம் விருந்தினர் மாளிகையில் செலுத்தி அனுமதி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற சேவா முன்பதிவு டிக்கெட்டுகளும் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here