அதிமுகாவில் சசிகலாவை நீக்கிய விவகாரம்.., அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!!!

0
அதிமுகாவில் சசிகலாவை நீக்கிய விவகாரம்.., அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!!!
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆகவும், டிடிவி தினகரன் துணை பொது செயலாளர் ஆகவும் ஆகவும் பதவி வகித்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்ற பின் பன்னீர்செல்வம் துணை பொது செயலாளர் ஆகவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்பேற்றனர். இதை எதிர்த்து சசிகலா தரப்பினர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில் சசிகலா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் இன்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், செந்தில்குமார் ஆகிய இருவரும் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரிதான் என தீர்ப்பளித்துள்ளனர். இது சசிகலா தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here