பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் யார் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை தட்டிச் செல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சரவண விக்ரம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த பொழுது அவரின் தங்கை மற்றும் குடும்பத்தினர் மாயா மற்றும் பூர்ணிமாவிடம் பேச வேண்டாம் என எச்சரித்தனர்.
ஆனால் அவர் அந்த வார இறுதியில் வெளியேறினாலும், தற்போது மீண்டும் வீட்டுக்குள் வந்து மாயாவிடம் மன்னிப்பு கேட்டு சகஜமா பேசி வருகிறார். இந்த நிலையில் அவரின் தங்கை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்றால் , நீங்கள் தவறான வழியில் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.