கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் ரூ.30 கோடி ஆடம்பர வீடு…பாத்தா அசந்து போயிடுவீங்க!!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு மும்பையில் ஆடம்பர வீடு ஒன்று உள்ளதாம். இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடி என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா மிக அபாரமான வீரர். மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை அடிக்க வல்லவர்.இவர் 2018 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா 111 ரன்களை குவித்தார். 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை ஹிட்மேன் என்று செல்லமாக அழைப்பர்.

 

அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ரோஹித் சர்மா தலைமை தாங்கும் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 5 முறை பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் ஆடம்பரமான வீடு மும்பையில் உள்ள அஹுஜா டவர்ஸின் 29 வது மாடியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீட்டின் மொத்த மதிப்பு ரூ.30 கோடி என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தம் 53 மாடிகள் உள்ள அஹுஜா டவர்ஸில் அவரது 29வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து பார்த்தால் அரேபிய கடலின் 270 டிகிரி கோணத்தை ஒரே நேரத்தில் பார்க்க முடியுமாம். 2015 ஆம் ஆண்டு இவர் இந்த ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here