ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரோஹித் சர்மா?? இந்திய அணியின் கேப்டனாக எடுத்த திடீர் முடிவு!!

0
ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரோஹித் சர்மா?? இந்திய அணியின் கேப்டனாக எடுத்த திடீர் முடிவு!!
ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரோஹித் சர்மா?? இந்திய அணியின் கேப்டனாக எடுத்த திடீர் முடிவு!!

ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பெரும்பாலான போட்டிகளில் விளையாட போவதில்லை என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித்

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கு பிறகு சர்வதேச இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் தொடரில், இந்திய வீரர்கள் காயம் ஏற்படாதவாறு கவனத்துடன் விளையாட வேண்டும் அல்லது, ஐபிஎல்லை தவிர்க்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏற்கனவே இந்தியாவின் நட்சத்திர வீரர்களான, பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் இந்த பெரிய தொடர்களை இழக்க இருப்பதால் மிக கவனத்துடன் ஐபிஎல்லில் விளையாட என இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில், இந்த ஐபிஎல் தொடரில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!

அதாவது, இந்த ஐபிஎல் தொடரில், ரோஹித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் விளையாடமல், அணியை வெளியில் இருந்து கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவால், ரோஹித் இல்லாத போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் அணியை தலைமை தாங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல, ஐபிஎல்லில் விளையாட இருக்கும், மற்ற இந்திய முன்னணி வீரர்களும் செயல்பட்டால், உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில், இந்திய வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here