2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று ரோகித் சர்மா உடனடியாக ஓய்வு அறிவிக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வந்தன.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது டி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் கலந்துரையாட உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை ரோஹித் சர்மா தலைமை ஏற்க மறுத்து விட்டால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.