‘நானே வருகிறேன்’….,காயத்தில் இருந்து மீண்டு வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்…,

0
'நானே வருகிறேன்'....,காயத்தில் இருந்து மீண்டு வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்...,
'நானே வருகிறேன்'....,காயத்தில் இருந்து மீண்டு வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்...,

கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இன்னும் வலிமையாக மீண்டு வருவதாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். தோனிக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அதே நேரத்தில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டுக்கு தலை மற்றும் கால்களில் பலத்த அடி ஏற்பட்டது. இந்த எதிர்பாராத விபத்தினால் காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இப்போது அவர் 6 மாதங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிளாமர் இருந்தா பரவால்ல.., இது அதுக்கும் மேலைல இருக்கு! நிவேதா பெத்துராஜின் போஸால் திணறிய ரசிகர்கள்!!

இதற்கிடையில், சிகிச்சையில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பண்ட், சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, சிகிச்சை முடிந்து மீண்டுமாக எழுந்து நிற்கத் துவங்கி இருக்கும் ரிஷப் பண்ட், டிவிட்டரில் ‘ஒரு படி முன்னே.. ஒரு படி வலிமையாக…ஒரு படி மேன்மையாக..’ என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here