மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 22, 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் தினம், திருவிழாக்கள் போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 22, 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல இடங்களில் இருந்து மக்கள் வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
“TNTET நியமன தேர்வு ரத்து?? முதல்வர் கொடுத்த வாக்கு.., வலுக்கும் கோரிக்கை!!
மேலும் அன்றைய நாள் சிறப்பு பேருந்து, ரயில்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.