இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்:
கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மதுரை, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்