ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் வலியுறுத்தல்:
கொரோனா தொற்று குறைந்து வரும் இந்த வேலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மேலும் அந்த கூட்டத்தில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட 27 பேர் கலந்து கொண்டவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் அலசோனை மேற்கொண்டர்.
அந்த கூட்டத்தில் உரையாடிய அவர், அனைத்து மாவட்ட ஆட்சியரின் கருத்துக்களையும் கேட்டு; ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் பெண்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைவர்க்கும் ரேஷன் அட்டைகள் கிடைக்கவும், போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்