இந்தியாவின் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி, குஜராத்துக்கு எதிரான முதல் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து திரிபுராவுக்கு எதிரான 2வது போட்டியும் டிராவில் முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஜன. 19) ரயில்வேஸ் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி முதல் இன்னிங்சில் நாராயண் ஜெகதீசனின் (245*) இரட்டை சதத்தால் தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ரயில்வேஸ் அணி வீரர்கள் களமிறங்கினர். நான்கு நாட்கள் கொண்ட போட்டியில், 2வது நாள் ஆட்டநேர முடிவில் ரயில்வேஸ் அணி 2 விக்கெட் இழப்புடன் 126 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தமிழ்நாடு அணி 363 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
WTC புள்ளி பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. வெளியான புள்ளிவிவரம்!!