இராமநாதபுரம் கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு – மருத்துவமனையில் சிகிச்சை !!!

0

இராமநாதபுரம் கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு – மருத்துவமனையில் சிகிச்சை !!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா 2ம் அலை இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. எனவே நேற்று இரவு அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here