பிக் பாஸ் சீசன் 5இன் டைட்டில் வின்னரான ராஜூ தனக்கு கொடுக்கப்பட்ட பரிசு தொகையை எவ்வாறு பயன்படுத்த உள்ளார் என்பதை பேட்டியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் ராஜு:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ. 50 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் ஓட்டின் பேரில் ராஜு தான் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அறிவித்தபடி ரூ. 50 லட்ச ரூபாய் பரிசு தொகை ராஜு தட்டி சென்றார்.
டைட்டில் வின்னரான பிறகு ராஜூவை தற்போது பல யூடியுப் சேனல்களுக்கு பேட்டி எடுத்த வண்ணம் உள்ளனர். அதில் இந்த 50 லட்ச ரூபாயை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜு பதில் அளித்துள்ளார். அதற்கு ராஜு சற்றும் யோசிக்காமல் 50 லட்ச ரூபாய் பணத்தை அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். என்னிடம் எதுவுமே எதிர்பார்க்காத என் மனைவியை நான் நன்றாக பார்த்து கொள்வேன் என கூறியுள்ளார். இவரின் இந்த பதில் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்