![அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - ரூ.32,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - ரூ.32,000 வரை சம்பளம் உயர்வு! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-salary.jpeg)
மாநிலத்தின் முக்கிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அமைச்சர் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் அரசு தங்கள் மாநில துறை சார்ந்த ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மாநிலத்தில் முக்கிய துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், கல்விப் பணியாளர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள் ஆகிய 31,473 ஊழியர்களுக்கு அதிரடியாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் பணியில் சேர்ந்த 9 மாதத்தில் இவர்களின் மாத ஊதியம் ரூபாய் 18,500 என்றும், அதனை அடுத்த இரட்டிப்பு ஆண்டில் அதாவது 18 வது ஆண்டில் அவர்களின் சம்பளம் ரூபாய் 32,000 மாக உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம் மாநில கல்வி அமைச்சர் பி. டி. கல்லா வெளியிட்டுள்ளார். இதுகுறித்த முக்கிய ஒப்புதலை மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வழங்கியது. தற்போது இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு இருப்பது, அவர்களிடையே உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.