“உன்னை எப்பவும் மிஸ் பண்றேன்” – கொரோனாவால் மனைவியை இழந்த ராஜா ராணி பட நடிகர்! கண்ணீர் பதிவு!!

0
"உன்னை எப்பவும் மிஸ் பண்றேன்" - கொரோனாவால் மனைவியை இழந்த ராஜாராணி பட நடிகர்! கண்ணீர் பதிவு!!

ராஜா ராணி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமான அருண் ராஜா காமராஜ், கொரோனாவால் இறந்த தனது மனைவி குறித்து அவரது பிறந்தநாளான இன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் உருக்கம்:

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் அருண் ராஜா காமராஜ். தொடர்ந்து இவர், இயக்குனர், பாடகர், எழுத்தாளர் என பல துறைகளிலும் கலக்கி வருகிறார். ரஜினிகாந்த்தின் கபாலி படத்தில், இவர் பாடிய நெருப்புடா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. தற்போது, இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார்.


இவரது மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கொரோனா தொற்றால், உயிரிழந்தார். அந்த சமயத்தில் அருண் ராஜாவும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தனது மனைவியின் பிறந்த நாளான இன்று, அவர் குறித்து முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது மனைவியின் ஓவியத்தை பதிவிட்டு, “உன்னை எப்போதும் மிஸ் பண்றேன் ஹாப்பி பர்த்டே பாப்பி” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கண் கலங்கி போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here