இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னா சூப்பர் ஜெயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பெங்களூர் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் மூலம் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் குண்டன் டீ காக் ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த 6 வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இச்சாதனை படைத்த டி காக்- க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் சூடுபிடிக்கும் மது விற்பனை.., டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!