தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 17, 18, 19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்போது டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கோடை வெயில் மற்றும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தமிழகத்தில் மது விற்பனை சூடு பிடிக்க துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 44 ஆயிரத்து 75 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் தேர்தல் அறிவிப்பால் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என தொண்டர்களை அழைத்து செல்கின்றனர். அவர்களுக்கு செலவுக்கு பணம், சாப்பாட்டுடன் சேர்த்து மது பாட்டில்களும் வழங்குவதால் மது விற்பனை அதிகரித்துள்ளதாக கடை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.