பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக, நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கிட்டத்தட்ட 11 மணி நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
போலீசார் குவிப்பு:
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில், சிவசேனை அமைப்பின் காலிஸ்தான் அணிக்கும், நிஷாங் என்னும் சீக்கிய பிரிவினர்களுக்கும் இடையே காளி மாதா கோவில் அருகே பயங்கர வன்முறை சம்பவம் அண்மையில் வெடித்தது. இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த வன்முறையில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 4 நபர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வன்முறையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வெடித்த மோதலால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. தற்போது, அங்குள்ள பதற்ற நிலையை தவிர்க்க நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கிட்டத்தட்ட 11 மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது குறித்து பேசிய மாநில முதல்வர் பகவந்த் மான், இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது, தற்போது இங்கு மீண்டும் அமைதி திரும்பி வருகிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்