ஜூன் 30 வரை அங்கன்வாடிகளுக்கு விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
ஜூன் 30 வரை அங்கன்வாடிகளுக்கு விடுமுறை..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஜூன் 30 வரை அங்கன்வாடிகளுக்கு விடுமுறை..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் முதலே விடப்பட்டு இருந்தது. ஆனாலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டும் மாணவர்களின் வருகை பதிவு உள்ளிட்ட அலுவலக பணிகளை செய்வதற்காக விடுமுறை அளிக்கப்படவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களுக்கான விடுமுறை குறித்து தமிழக அரசு மே மாதத் தொடக்கத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதாவது, மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுவதாக அறிவித்தது. தற்போது, இதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநில அரசும் அங்கன்வாடிகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

கவர்ச்சி உடையில் இளசுகளை கதிகலங்க விட்ட திவ்ய பாரதி., வைரலாகும் புகைப்படம்!!

அதாவது, அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பஞ்சாப்பில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த விடுமுறைக்கான சத்துணவு பொருட்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் வழக்கம் போல அங்கன்வாடிகள் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here