அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் அகவிலைப்படியே மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்த்தி வருகின்றனர். இதன்படி, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், அசாம், இமாசலப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் அகவிலைப் படியை அதிகபட்சம் 3%-லிருந்து 4%-ஆக உயர்த்தி அடுத்தடுத்து அறிவித்தது. ஒவ்வொரு மாநில அரசு உயர்த்தி உள்ள அகவிலைப்படியை குறித்து பின்வருமாறு காணலாம்.
ஜூன் 30 வரை அங்கன்வாடிகளுக்கு விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அகவிலைப்படி உயர்வு:
- ராஜஸ்தான் – 4% அதிகரித்து 38%-லிருந்து 42%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2023 முதல் அமல்
- இமாச்சலப் பிரதேசம் – 3% அதிகரித்து 31%-லிருந்து 34%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2022 முதல் அமல்
- ஜார்க்கண்ட் – 8% அதிகரித்து 34%-லிருந்து 42%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2023 முதல் அமல்
- ஹரியானா – 4% அதிகரித்து 38%-லிருந்து 42%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2023 முதல் அமல்
- தமிழ் நாடு – 4% அதிகரித்து 38%-லிருந்து 42%-ஆக உயர்வு – ஏப்ரல் 1, 2023 முதல் அமல்
- உத்தரபிரதேசம் – 4% அதிகரித்து 38%-லிருந்து 42%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2023 முதல் அமல்
- கர்நாடகா – 4% அதிகரித்து 31%-லிருந்து 35%-ஆக உயர்வு – ஜனவரி 1, 2023 முதல் அமல்