நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தலைவர்கள் தினம், திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள் போன்ற நாட்களின் போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மும்பையில் பி ஆர் அம்பேத்கரின் நினைவு தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் நாளை மும்பை முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வருக்கு கெய்ட்வாட் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை மும்பைக்கு மகாராஷ்டிரா முதல்வர் பொது விடுமுறை அளிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.