தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 பாடங்களில் சென்டம் எடுத்த மாணவர்கள் முறைகேடு செய்ததாக தெரிய வந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அடடா மழைடா அடைமழை டா.., மதுரையில் கொட்டி தீர்க்கும் இடியுடன் கனமழை!!
இருவரும் மதுரையை சேர்ந்த ஒரே பள்ளியில் பயின்று, தேர்வின் போது அடுத்தடுத்த பதிவெண்களை கொண்டுள்ளனர். இருவரின் விடைத்தாள்களிலும் ஒரே மாதிரி கையெழுத்து உள்ளது. இதற்கேற்றார் போல் விடைத்தாள்கள் கலக்கும் பணியின் போது, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள் கலக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள் என 15க்கும் மேற்பட்டோரை விசாரித்து வருகின்றனர்.