விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., PM கிசான் திட்டத்தை தொடர்ந்து இந்த சலுகையும் உண்டு.., வெளியான அறிவிப்பு!!!

0

மத்திய அரசின் கீழ் பிரதான் மந்திரி கிசான் சம்மன், பிஎம் கிசான் பசல் யோஜனா, பிரதமர் மன்தன் யோஜனா ஆகிய திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதை தொடர்ந்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் சிறு, குறு, நடுத்தர மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் தொழில் முனைவோர், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here