தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே.., செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம்!!

0

தமிழகத்தில் 10, 11, 12, ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.

மேலும் இந்த செய்முறை தேர்வுக்கான முகப்புத்தாள்கள், படிவங்கள் போன்றவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சுற்றுக்கு 20 முதல் 35 மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(23.02.2024) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here