தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு?? கல்வி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு?? கல்வி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்ற வருகிறது. தற்போது வரை மொழிப்பாடங்கள் முடிவடைந்த நிலையில் இனி வேதியல், இயற்பியல் போன்ற தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது இதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அன்றைய தினத்தில் நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here