இன்றைய காலகட்டத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்காகவே “மகிளா சம்மான் சேமிப்பு” எனும் குறுகிய கால முதலீடு திட்டம், தபால் நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!!
இரண்டு ஆண்டுகளுடன் முடிவடையும் இத்திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. பயன் பெற விரும்புபவர்கள், தங்களது ஆதார், பான் கார்டு மற்றும் புகைப்படங்களை கொண்டு, அருகாமையில் உள்ள தபால் நிலையங்களில் பதிவு செய்யலாம். இதன்மூலம் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விட அதிக வட்டியை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.