நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி” திட்டத்தின் கீழ், ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இத்திட்டத்தில் பெண் விவசாயிகளை ஊக்குவிக்க உள்ளதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதாவது வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில், பெண் விவசாயிகளுக்கு உதவித்தொகை இரட்டிப்பாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி ஆண்டுக்கு 12000 ரூபாயை பெண் விவசாயிகள் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் பலர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.