பிரதான் மந்திர் கிசான் திட்டத்தின் மூலம் 13 வது தவணை தொகையை பெற, விவசாயிகள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழக வேளாண் – உழவர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
மத்திய அரசின் வாயிலாக பி எம் கிசான் என்ற திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 என்ற தொகை மூன்று தவணையாக, ரூபாய் 2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 13 வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த தவணைத் தொகையை பெற விவசாயிகள் கட்டாயம் இதை செய்ய வேண்டும் என தமிழக வேளாண் உழவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, பிஎம் கிசான் வலைதளத்தின் மூலம் ஆதார் எண்ணை சரிபார்த்தல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே, 13ம் தவணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட சட்டப்பேரவை இன்று தொடக்கம்., முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!!
இதுவரை, இந்த செயல்முறையை முடிக்காத விவசாயிகள், உடனடியாக இ சேவை மையம் சென்று பி எம் கிசான் தளத்தில் உங்கள் பெருவிரல் ரேகையை பதிவு செய்து, ஆதார் இணைப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். அப்படி இல்லை என்றால் உடனே இதை செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.