நேற்று பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தை சேர்ந்த விமானிகள் இருவர் மரணம் அடைந்து உள்ளது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
பயிற்சி ஓட்டம்:
ஒடிசாவில் தெங்கனல் மாவட்டத்தில் கங்கடஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசால் ஏர்ஸ்ட்ரிப்பில் பயிற்சி ஓட்டம் எப்போதும் போல் நடந்து உள்ளது. இந்நிலையில் விமானிகளின் கட்டுப்பாட்டில் இருந்த விமானம் திடீரன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதனால் அதனை ஒட்டிய பீகார் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து உள்ளனர். அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்திற்க்கான காரணத்தை விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.