மக்களின் முக்கிய தேவையாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகின்றன. அதன் விலையில் ஏற்படும் இந்த மாற்றமானது அனைத்து தரப்பினர் மத்தியிலும் கலக்கத்தை வரவழைத்து உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் மற்றும் டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இந்த அத்தியாவிசய எரிபொருளின் விலை ஏற்றமானது சமூகத்தின் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக முடங்கி உள்ள மக்களின் மனதில் இப்படிப்பட்ட அன்றாட பொருட்களின் விலை அதிகரிப்பு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் இந்த மாற்றம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையிலும் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் ஆயில் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் ,டீசல் 34 காசுகள் அதிகரித்து உள்ளது. அதாவது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.19-க்கும் , ஒரு லிட்டர் டீசல் ரூ.93.23-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்