நான்கு நாட்களாக குறையாத விலை – வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள்!!

0

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம்:

சர்வதேச எண்ணை நிறுவனங்களின் மதிப்பீடு அளவை வைத்து மத்திய அரசானது மாநிலங்களுக்கு மொத்த கொள்முதல் விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்குகிறது.  இவர்களிடமிருந்து மாநில அரசு கொள்முதல் செய்து அதற்கான மதிப்பு கூட்டு வரியுடன் சில்லறை விற்பனையாக வாகன ஓட்டிகளிடம் எரிபொருட்களை விற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுக விலையிலே இந்த எரிபொருட்கள் உள்ளன. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் சில காசுகள் சரிந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருந்தாலும், வாகன ஓட்டிகளிடம் இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக இந்த எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

அதே போல், இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் இந்த விலையில் எப்போது மாற்றம் வரும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here