சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் குறித்து தான் ஒவ்வொரு நாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுபட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய நாளிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக மக்களின் நலன் கருதி தொடர்ந்து 6 மாத காலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் வந்தது. அதற்கு பின்பாக, ஜூன் மாதம் முதல் விலை நிலவரம் உச்சத்தினை அடைந்தது. இதற்கு கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றமே காரணம் என்று கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயில் நிகழும் மாற்றங்கள் காரணமாக விலை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இப்படியான சூழலில் கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சகட்டமாக லிட்டர் 100 ரூபாயினை தொட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அதற்கு தொடர்ந்து தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். ஆனால், விலையில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகின்றன. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.58 என்றும் டீசல் ஒரு லிட்டர் 85.88 என்ற விலையிலையும் இருந்து வருகின்றது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.