பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று – கவலையில் ரசிகர்கள்!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல பிரபலங்களையும் இந்த நோய் தாக்கி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகையான ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆலியா பட்

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் கனவுகன்னியாக இருந்து வருகிறார். அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் என்றால் அவர் ஆலியா பட் தான். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவர் தன்னை தானே வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தன்னுடன் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வேதனையடைந்துள்ளார். ஏற்கனவே அமீர் கான், மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கடந்த வருடம் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி கொரோனா என்னும் பெருந்தொற்றை சமாளித்து தற்போது ஓரளவிற்கு மீண்டு வந்த நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இந்த நேரத்தில் மறுபடியும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி துறை சோதனை – ஆளும்கட்சி உள்குத்தா?? கொந்தளிக்கும் திமுக பொதுச்செயலாளர்!!

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் இந்த வேளையிலும் இந்த நோய் பரவுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. பிரச்சாரம், மீண்டும் ஷூட்டிங், சமூக இடைவெளியை பின்பற்றாமையே இதற்கு காரணமாக இருக்குமோ?? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆலியா பட் இந்நிலையில் இருந்து மீண்டு வர அவரது ரசிகர்கள்  பலரும் வேண்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here