தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது ஸ்டாலின் மகளின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் கொந்தளித்துள்ளார்.
வருமானவரி துறை சோதனை
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரப்புரையை நடத்தி வருகின்றனர். ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறை கூற அவர் இவரை குறை கூற இப்படியே போய்க்கொண்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வனிதாவால் மகன் ஸ்ரீஹரிக்கு வந்த நிலைமை – பாவம் என்ன பாடு படுறாரு பாருங்களே!!
இந்நிலையில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் தற்போது வருமானத்துறை சோதனை நடந்து வருகிறது. இதனை கண்டித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். பா.ஜ.க கட்சி கூட்டணியின் தோல்வி பயத்தை தான் இது காட்டுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் திமுக பயப்படாது. இப்படிபட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு மேலும் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் தருகிறது என்றும் கூறியுள்ளார். அதுவும் தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடன் தான் இந்த வருமான வரி சோதனை நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.