தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 6000 வழங்க இருப்பதாக தெரிவித்தது. அதற்காக ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கி வருகின்றனர்.
மேலும் ரேஷன் கடை வாயிலாகவும் கொடுத்து வருகின்றனர். எனவே நாளை முதல் பணம் கொடுக்க இருக்கும் நிலையில் இன்று வடசென்னை பகுதியில் டோக்கன்கள் ரேஷன் கடை வாயிலாக வினியோகிக்கப்படுகிறது. எனவே இன்று காலை 5 மணி அளவில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வட சென்னையில் உள்ள எல்லா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர்.