இந்தியாவின் கிழக்கு எல்லை பகுதியில் அமைந்திருக்கும் மியான்மரில் தற்போது பதற்ற நிலை நிலவி வருகிறது. அதாவது இதுவரை மியான்மரில் ஜன நாயக ஆட்சி நடந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ராணுவ ஆட்சி இடம் பிடித்து ஜன நாயக ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவ ஆட்சி செய்த துப்பாக்கி சூட்டில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் அந்நாட்டு மக்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் மியான்மர் மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பிக்க பிளான் போட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லையோரம், அண்டைநாடு, அல்லது ராணுவ ஆட்சிக்கு எதிரான குழுவில் சேர முடிவெடுத்துள்ளனர்.