தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்கள், வார விடுமுறையின் போது பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.