நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று அனைத்து கட்சிளுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது.
அனைத்து கட்சி கூட்டம்
நேற்று நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பொருளாதாரத்தை முன்னடத்தி செல்வதற்கான வழிமுறைகளுடன் கூடிய பட்ஜெட் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சிகளுக்கான கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்தும் வகையில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்க வேண்டும் எனவும் நாட்டின் முக்கியமான விஷயங்களை குறித்து ஜனநாயக முறையில் விவாதங்கள் நடக்க வேண்டும்” இவ்வாறாக தெரிவித்தார். தொடர்ந்து நாடாளுமன்றம் சிறப்பாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.