கொரோனா தற்போது இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை 2 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார்
2021 ஆம் ஆண்டிற்கான 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 இல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அனால் இந்த கொரோனா நாடெங்கிலும் பரவியதால் இந்த விருது வழங்கும் விழா 2 மாதத்திற்கு ஒத்திணைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது ஏப்ரல் 25 இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் வரலாற்றில் இது நான்காவது முறையாக இதுபோல நடந்துள்ளது. 1938 இல் ஏஞ்சல்ஸில் வெள்ளம் வந்ததால் முதன் முதலாக இந்த ஆஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1968 இல் மார்ட்டின் லூதர் ஜூனியர் படுகொலை காரணமாகவும், 1981 இல் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சுடப்பட்டபோது இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஆஸ்கார் விருதுகள் விண்ணப்பிக்கும் படங்களுக்கான வித்துமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி அமேசான் ப்ரைம், ஓடிடி இல் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கார் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.