தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.., கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

0
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேலும் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில தினங்களில் புயலாக உருவாக கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here