வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்., அரசின் தவறு இதுதான்., இன்னும் உதவி கிடைக்கல.,  ஓபிஎஸ் குற்றச்சாட்டு!!!

0
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்., அரசின் தவறு இதுதான்., இன்னும் உதவி கிடைக்கல.,  ஓபிஎஸ் குற்றச்சாட்டு!!!
வங்கக்கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக 3 நாட்கள் கடந்தும் சென்னையின் பெரும் இடங்கள்  வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தத்தளித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல திரைபிரபலங்கள் நிவாரண தொகை  மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீட்பு பணியில்   ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சென்னை மக்களுக்கு உணவு மற்றும்  அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதன் பின் பேட்டியாளர்கள் சந்திப்பில் திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வெள்ள அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு உதவியும் இப்போது வரை கிடைக்கவில்லை  என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here