பள்ளி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதனை பள்ளி நிர்வாகம் பதிவு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் புதிய உத்தரவு
கொரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் தான் படத்தை கவனித்துக்கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் கெட்டு போக வாய்ப்புள்ளது என்று பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தற்போது மாணவர்களுக்கு பாலியல் தொல்லையும் அதிகரித்துள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதாவது இனி நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் பள்ளி நிருவாகத்தால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இதுபற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளார் ஸ்டாலின். மேலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.