தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் காய்கறி விலைகளை சற்று அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் ரக வெங்காயத்தின் விலை எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. அதாவது முதல் ரக வெங்காயத்தின் விலை ரூ 6 உயர்ந்து தற்போது ஒரு கிலோவுக்கு 70 ரூ விற்பனை செய்து வருகிறது. இதற்கு காரணம் முதல் ரக வெங்காயத்தின் வரத்து குறைந்ததாலும், சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோவுக்கு 80 ரூ விற்பனை செய்வதால் தான் விலை உயர்ந்துள்ளது என்று மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நிலக்கரி துறையில் அறிமுகமாகும் புதிய திட்டம்…, மத்திய அரசு அறிவிப்பு!!