அமலாகிறதா நாடு தழுவிய பொது முடக்கம்?? பிரதமர் அறிவிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

0

இந்தியாவில் மிக வேகமாக ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கூடுதல் கட்டுப்பாடுகள்:

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவும் எனவும், ஆபத்தை விளைவிக்க கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டும் இந்த வைரஸால் 220 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜம்முவில் 3, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் 2, ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், லடாக், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இது பண்டிகை காலம் என்பதால், தொற்று பரவல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here