தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் தான் ரத்னா. இவர் சன் மற்றும் கலைஞர் டிவியில் செய்தி வாசித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் பொதுவாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும், அதில் தன்னை பற்றி அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருவதுமாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் தனது கடந்த கால வாழ்வில் தனக்கு நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை தற்போது தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு முறை இவர் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுத்து விட்டு வந்து கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழி மறைத்த 25 வயது இளைஞர், நான் உங்களை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என இவரிடம் கேட்டாராம். அதை கேட்ட இவர் தனக்கு திருமணம் முடிந்து விட்டது என சொல்லி அவரிடம் இருந்து தப்பித்து விட்டாராம். மேலும் அப்போது இவர் அந்த ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படத்தை தற்போது பதிவிட்டு அந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.