தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கவும் தமிழக பள்ளி கல்வித்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் மாணவர்களுக்கு கல்வி மட்டும் அல்லாமல் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதிலும் தமிழக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக “புதியன விரும்பும் 2023” முகாம் ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் இன்று தொடங்கியது. இந்த முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மைச் செயலாளர் கலந்து கொண்டனர்.
அடடே., புதிய உச்சம் தொட்ட ஆதார் கார்டு., இப்படி கூட சாதனை படைக்க முடியுமா., வெளியான சூப்பர் நியூஸ்!!
அதன் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பறை இசைத்து இந்த முகாமை தொடங்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தில் இருந்து 38 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 1040 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமின் மூலம் பல்வேறு மாணவர்களின் திறமைகள் கலை உணர்வு வெளிப்படும் என்று தான் தெரிகிறது.