இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எப்படி இன்றியமையாத ஒன்றாக உள்ளதோ அதேபோன்று நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அபார் அட்டை கட்டாயம் தேவை என மத்திய அரசு சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற திட்டத்தை கூடிய விரைவில் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இந்த அட்டையில் மாணவர்கள் முழு விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், அதில் உள்ள கியூ ஆர் கோடை பெற்றோர்கள் ஸ்கேன் செய்யும் போது மாணவர்களின் கல்வி பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த அபார் அட்டை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்னும் சில நாட்களில் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை அனைத்து மாணவர்கள் கையிலும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் தேவை., 1,500 கோடிக்கு? ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை!!!