புதிய கல்வி கொள்கை ஆலோசனை கூட்டம் – தமிழக அரசு புறக்கணிப்பு!!

0
புதிய கல்வி கொள்கை ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு புறக்கணிப்பு!!
புதிய கல்வி கொள்கை ஆலோசனை கூட்டம் - தமிழக அரசு புறக்கணிப்பு!!

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாநில கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது இதனை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை:

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்தது.இதனால் நாட்டின் கல்வி திறன் மேம்படும் என்று தெரிவித்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

புதிய கல்வி கொள்கை:
புதிய கல்வி கொள்கை:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நாட்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து இன்று அனைத்து மாநில கல்வி அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கடந்த மே 15ம் தேதி தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த கூட்டம் காணொளி மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் சூழலில் இந்த கூட்டத்தை தற்போது தமிழக அரசு புறக்கணித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here